Wednesday, 16 August 2017

அன்பும்_நன்றியும்

Image may contain: food

பெய்யும் சிறு மழைக்கு
காத்திருந்த மனிதருக்கு
கையில் கிடைத்த காசுக்கு
காலை சுற்றும் பூனைக்கு
வாலை குழைக்கும் நாய்க்கு
உதவி செய்த நண்பனுக்கு
உருகி அணைத்த காதலுக்கு
கன்னத்தில் முத்தமிட்ட குழந்தைக்கு
பாதம் சுமக்கும் செருப்புக்கு
அன்னமிட்ட அன்னைக்கு
கண்டித்த ஆசிரியருக்கு
வீசிய காற்றுக்கு
நிழல் தந்த மரத்திற்கு
தாகம் தீர்த்த நீருக்கு
பசி தீர்த்த உணவுக்கு
உடல் சாயும் நிலத்துக்கு
வெப்பம் தரும் கதிரவனுக்கு
குளுமை தரும் நிலவுக்கு
நாம் சுமக்கும் உடலுக்கு
ஐம்புலன்களைச் செவ்வனே
இயக்கும் பாகங்களுக்கு
நித்தம் நித்தம் வாழ்வை
கடத்தும்
நிதம் வாழ்வை அழகாக்கும்
இவைகளையும்
அவர்களையும்
எதைத்தான் நாம்
போற்றியிருக்கிறோம்?
யாருக்குத்தான் நாம்
நன்றியுரைத்திருக்கிறோம்?

வெள்ளைப்பலகையிலிருக்கும்
கரும்புள்ளியை மட்டும்
மனம் முழுக்கப் பூசி
வலம் வருவதைப்போல
கிடைக்கும் வரை போராடி
கிடைத்தபின் துச்சமெனத்
தூக்கியெறிந்து
பின் இல்லாத ஒன்றிற்காக
ஏங்கி தவிக்கும் மனக்கூட்டை
விட்டு வெளியே வரலாம்
கரைந்து பாயும் மழைமேகமாய்
நீங்கள் நன்றிகூறி!
 

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...