Tuesday 29 August 2017

தமிழ்நாடு

அந்தச் செழிப்பான
மேய்ச்சல் நிலத்தில்
நுழைந்த சில நூறு மந்திகள்
ஆட்டம் போட
பலகோடி ஆடுகள்
வெறும் வாயை
அசைப்போட்டுக்கொண்டிருந்தன
மந்திகளை வேடிக்கைப்பார்த்துக்
கொண்டிருந்த ஆடுகளை
உணவாக்கி
பிரியாணி செய்ய
சில ஏவல் ஓநாய்களும்
வஞ்சக நரிகளும்
மேய்ச்சல் நிலத்தின்
நாடகங்களை
கண்காணித்துக்கொண்டிருந்தன
பயணத்திலிருந்த கொழுத்த
கிழட்டுச் சிங்கத்தின்
வரவுக்காக!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!