Saturday 7 March 2015

மகளிர் தினம்

நிற்காத எம் கால்கள்
பூமித் துளைத்து
வேர்விட்டுச் செல்கிறது
முளைத்த சிறகுகளும்
உதிர்ந்து வீழ்கிறது
உறவென்று அன்பென்று
பெண்மையென்று தெய்வமென்று
நிரம்பித் தளும்பும் பொய்மையில்
பெரும் யுகங்கள் சாகிறது!

இன்றொருநாள் மட்டும் 
தேவதையென்று
விளிக்கிறீர் ,
மீண்டும் மீண்டும்!
இன்னுமென்ன வரங்கள்
வேண்டும்,
நிரம்பாத
உம் ஆசைக் கோப்பையை
இட்டு நிரப்ப?
நீவிர் மறந்துபோன
அந்தச் சக  பெண்மையின்
விடுதலையேயன்றி!?

1 comment:

  1. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோ...அருமை.

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!