Wednesday 10 February 2016

சுயநலம்

 
அழகாய் ஆடிய மயில்தனை
தனக்காய் ஆடப் பூட்டி வைத்தான்
கானகத்தில் பாடியக் குயிலினை
எப்படியோ பிடித்துக் கூண்டிலிட்டான்
தனியாய்க் களித்திருந்த கிளிதனை
தனக்கொரு துணையென
சிறகை வெட்டி வைத்தான்
நான் நானென அவனாய்
மட்டும் இருந்த மனிதன்
அவன் பிடித்து வைத்த
எல்லா அழகியலும்
தான் விரும்பும்போது
விரும்பும் வகையில்
மட்டுமெனக் கட்டளையிட்டான்
அவன் அமைத்த கூண்டுகளில்
வெற்றுக் கூடுகள் மட்டுமே மிஞ்ச
இப்போது அவன்
பொம்மை தேசத்து அரசனான்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!