Monday 29 February 2016

மனிதர்கூட்டம்

பசி தீர்ந்த பிறகு
சுவையைப் பற்றியும்
தேவை தீர்ந்த பிறகு
மனிதரைப் பற்றியும்
தேர்தல் முடிந்தபிறகு
வாக்குரிமைப் பற்றியும்
வெட்டிய பிறகு
வலியைப் பற்றியும்
வார்த்தைகளை
கோபத்தில் கொட்டியபிறகு
மௌனத்தில் மீன்பிடிப்பது பற்றியும்
சுடுகாட்டில் எரித்த பிறகு
மறந்துவிட்ட அன்பைப் பற்றியும்
இப்படியே பற்றிப் பற்றி
வாழ வேண்டிய தருணங்களையும்
பற்றாது விட்ட மனிதர்களின் மனங்களையும்
அலட்சியமாய்க் கடந்த வாழ்க்கையில்
பேசிப் பேசி சிலாக்கிறோம்
நாம்
வீணாய்ப் போன
பெரும் மனிதர்கூட்டம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!