Wednesday 10 February 2016

தெரிவு

 
 அதே சில நொடிகள்தான்
 அதே மனம்தான்
 அதே உதடுகள்தான்
 வார்த்தைகள் மட்டுமே
 மலர்களாய் இல்லை
 செந்தழல் கங்குகளாய்!

 கனியிருப்ப
 காய் கவர்வதின்
 நோக்கம்
 அன்பின் வறட்சியாகவோ
 அன்பின் மிகுதியாகவோ
 இருக்கலாம் உறவுகளில்
 குளத்தில் விழும் கல்லாய்
 விழுங்கிக் கொண்டால் போதும்!

குளமாய் நானில்லை
நதியாய் ஓடி
கடலில்  சேரும்
நேரம் வரை
அன்பை தெரிவு
செய்கிறேன் - ஆதலால்
காதலே
நீ எப்போதும்
தெளிந்த நீரைக் காண்கிறாய்
காயங்களைத் தானே
ஆற்றிக்கொண்டு
நேசம் மட்டும்
நிஜமாய் வாழ்கிறது
ஆழ்மனக் கடலில்
நீந்தலாம் வா!
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!