Monday, 29 February 2016

கலப்படம்

மைலாப்பூர் நோக்கிச் செல்லும் வி.எம். சாலையில் அமைந்திருக்கும் ஆர்கானிக் கடை ஒன்றில், ஆர்கானிக் ப்ரவுன் சுகர் (சர்க்கரை) என்று ஒரு கிலோ வாங்கினேன், வீட்டிற்கு வந்து, ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு, சிறிது நேரம்
கழித்து, தண்ணீரை வடித்தப்போது, ப்ரவுன் நிறம் தண்ணீரில் கலந்து, சர்க்கரை சாதா சர்க்கரையாய் வெள்ளையாய் தனியே நின்றது!

புகழ்ப்பெற்ற பெருங்காயத் தூள் டப்பாவில், 80 சதவீகிதம் மைதா என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது!

சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல பழரச பானங்களிலும் இருப்பது பெருமளவு தண்ணீரும், சர்க்கரையும், 5 சதவீகிதத்துக்கும்
குறைவான சிறிதளவு எஸன்ஸ் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது!
இந்த மாவை நீங்கள் அப்படியே கலந்து சிக்கனை சேர்த்து சிக்கன் 65 செய்யலாம் என்று புதிதாய் விளம்பரம் ஓடுகிறது!

ப்ரைட் ரைஸ் செய்ய ரெடிமேட் மசாலா, குழம்பு தாளிக்க, கூட்டு வைக்க, சாம்பார் வைக்க, மிளகையும், மஞ்சளையும் கூட பாக்கெட் செய்தாகி விட்டது!
வீட்டில் கிரைண்டர் இருந்தாலும் கடையில் ரெடிமேட் இட்லி மாவு வாங்குகின்றனர்!

தனியே இருக்கும் இளைஞர்களுக்காக இருந்த இந்தச் சந்தை மாறி இப்போது இல்லத்தரசிகள் அல்லது அரசர்கள் இருக்கும் வீட்டிலும் இதுதான் நிலை என்றாகி விட்டது!

மாத தொடக்கத்தில் பட்ஜெட் போட்டு, வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டிலேயே அரைத்து, வரவில் மிச்சம் பிடித்து, குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பேணிய தலைமுறைப் பழக்கம் தொடர்ந்தால் வீட்டிற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது!
நம்மைச் சுற்றி கலப்படங்கள் மனிதர்களில் மட்டுமல்ல, பொருட்களிலும் நிறைந்திருக்கிறது!

எதற்கெடுத்தாலும் மக்களே போராட்டம் செய்து வாழ்வே போர்களமாகிப் போன நாட்டில், குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக நாம் கொஞ்சம் பழைய உணவு முறைகளுக்கு உயிர் கொடுத்து வியர்வை சிந்தலாம், முடிந்த வரை பொருட்களை சரியாய் தேர்ந்தெடுத்து வாங்குவோம்!

இருப்பினும் எல்லாவற்றிலும் கலப்படம் செய்பவர்களுக்கு ஒருநாள் இழப்பு மிகப் பெரிதாய் இருக்கும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...