Monday 29 February 2016

மக்களிடம் இருந்து

ஒட்டுக் கேட்க
மக்களைக் காணும் வகையில்
திறந்தவெளி வாகனத்தில் வருகிறார்கள்,
வென்றப் பிறகு,
யாரும் பார்க்க முடியாத
கறுப்புத் திரை போட்ட கார்களில்
பவனி வருகிறார்கள்
அமைச்சர்கள்......

வித விதமாய்க்
கொடிகள் பறக்கிறது
கார்களின் முகப்புகளில்....
வேகமாய்ப் பாய்கிறார்
போக்குவரத்து காவல் அதிகாரி,
மக்களின் வாகனங்களை
ஓரங்கட்டி
நீதியை நிலைநாட்ட!
விடாமல் வசூலிக்கப் படுகிறது
அபராதம்
மக்களிடம் இருந்து மட்டும்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!