Monday 29 February 2016

உயிரின் உறவு!

வீடு முழுக்க உறவுகள்
இருந்தாலும்
சாப்பிடுகையில்
கண்களில் நீர் வழிய
சட்டென்று
புரையேறும் போது
ஓடி வந்து தண்ணீர் தருவார்
அம்மா! 


கீழே விழுந்த போது
அலட்சியமென்று
பரிகசிக்காமல்
எழுந்து நின்ற போது
ஆணவமென்று
முதுகில் குத்தாமல்
கோபத்தில் விழும்
வார்த்தைகளில்
வன்மம் இல்லை
அன்பும்
ஆற்றாமையும் மட்டுமே
என்று
எப்போதும் உணர்வார்
அப்பா!

எத்தனை உருவங்களில்
அன்பு வந்தாலும்
பெண்ணின் கண்களில்
உள்ளத்தின்
உணர்வுகளைக் காண்பது
தந்தையோ தாயோயன்றி
மேலோட்டமான
வேறொரு உறவோ
அன்போ இல்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!