Monday 29 February 2016

முடியும், விடியும்!

ஆங்கிலயர் ஆண்ட காலத்தில் அவர் தரும் பதவிக்காக, தம்முடைய சுயநலத்துக்காக, தம் ஆண்ட நிலத்தின் பாதுகாப்பிற்காக என்று பல காரணங்களுக்காக அவருடன் சேர்ந்து இயைந்து வாழ்ந்த இந்தியர்கள் உண்டு, அவர்கள் நீக்கமற எல்லாச் சாதியிலும் நிறைந்திருந்தனர்!

அதைப்போலவே எதிர்ப்பவர்களும் நிறைந்திருந்தனர், சுய ஆட்சிக்காக எதிர்த்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, சுரண்டிக் கொண்டிருந்த பரங்கியரைத் துரத்தியப்போது, துதிப் பாடியவர்களுக்கும் சேர்த்தே சுதந்திரம் கிடைத்தது!

அதுபோல, தொடரும் ஊழல், சாராய ஆறு, சீரழியும் கல்வி, மக்களின் தலைக்கு மேல் ஏறிக்கொண்டிருக்கும் கடன், ஆபத்தான அணுவுலைகள், மக்களின் பாதுகாப்பு மீதான அலட்சியம் ...என்று சகட்டுமேனிக்குக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது, மழை வெள்ளத்தில் ஏற்பட்ட ஒற்றுமை, மக்களுக்கு இந்த விஷயங்களில் தொடரும் என்றால் அது எல்லோருக்கும் ஒரு விடிவாய் அமையும், அதற்கு நடுவில் பீப் பாடல்களும்...திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற ரீதியில் கொண்டாட்டங்களும், மலிவு விலை இலவசங்களும் மூழ்கடிக்காமல் இருக்க வேண்டும்! 

நமக்கு நாமே என்று எழுந்தால் மட்டுமே, முடியும், விடியும்! இல்லையென்றால் இன்னொரு சுனாமியோ, பூகம்போ வந்து மொத்தமாய்ப் புரட்டிப் போடும்! மெதுவாய் விலங்கினங்கள் இந்த இயற்கையைக் கட்டமைத்து இந்தப் பூமியைப் புனரமைக்கும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!