Thursday 16 November 2017

சென்னை

சில நாட்களில்
பாலைவனமாகவும்
சில நாட்களில்
தனித்தீவாகவும்
சில நாட்களில்
இளவேனில்
சோலையாகவும்
நீ காட்சித்தருகிறாய்
யாரோ வருகிறார்கள்
யாரோ பழிக்கிறார்கள்
யாரோ வீழ்த்துகிறார்கள்
யாரோ வாழ்த்துகிறார்கள்
நீ சலனமில்லாமலிருக்கிறாய்
உன்னில்
காய்தலும்
வாழ்தலும் போல
மூழ்குதலும் நலமே
சென்னை நகரமே
பிறந்த மண்ணும்
தாய்தான் அன்றோ
உனைப்பிரிதலும்
துயர்தான் அன்றோ?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!