Thursday 16 November 2017

கீச்சுக்கள்!

அணைநீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல்,
விபத்துக்கள் குறைய ஒரிஜினல் லைசன்ஸ்,
கல்வி தரத்தை முன்னேற்ற அரசுப்பள்ளிகள் தனியார் மயம்
தர்ம யுத்தத்தை முடிக்க துணைமுதல்வர் பதவி
நமக்கு கிடைத்த இந்த
தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை
நாசா கடத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! 😱

-------------
"மோடி இரண்டாயிரம் ரூபாயில் சிப்பு வெச்சிருக்காரு, அதோட மூவ்மெண்டை ஸாடிலைட் மூலமா கண்காணிப்பாரு"
"இந்த பணமதிப்பிழப்பில் பாருங்க, எல்லா கருப்புப்பணமும் வரப்போகுது, எல்லாருக்கும் 15 லட்சம் தரப்போறாரு"
"ஜிஎஸ்டியால விலையெல்லாம் குறைஞ்சு, நமக்கு நல்லது நடக்கப்போகுது"
"மோடியால தொழில் எல்லாம் முன்னேற்றம் அடையும், அவரு மாதிரி வராதுங்க"
"உபி யில பாருங்க, அது குஜராத் மாதிரி (!) மாறப்போகுது"
"அட வோட்டிங் மெஷினில் குளறுபடி செய்ய எல்லாம் வாய்ப்பேயில்ல"
"எல்லா பணத்தையும் வெச்சு இந்திய இராணுவத்தை பலமாக்கி வெக்கறாரு, ஒரு பய வாலாட்ட முடியாது"
.......இப்படி சொன்னவர்கள் எல்லாம்.............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
இனிமேலாவது "கண்ணாடிய துடைச்சுப் போட்டுக்கங்க!" 😜

-------------------------------


"50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள், பணமதிப்பிழப்பில் தோல்வி ஏற்பட்டால் என்னை கொளுத்திவிடலாம்!"
"ஜிஎஸ்டியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது"
"மோசமான காங்கிரஸ் ஆட்சியின் விளைவுதான் பெட்ரோல் விலையேற்றம்"
இதெல்லாம் யார் சொன்னதென்று தெரிகிறதா??? 😜😜😜
#முன்னாள்_குஜராத்_முதல்வர்_இந்நாள்_பிரதமர்
God only should save this country from these politicians!
-------------------------------

இந்தச் சுனாமி, பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சி எல்லாம் பாரபட்சமான நம் சட்டத்தைப் போலவே செயல்படுகிறது, குறைந்தபட்சம் ஒரு எம்எல்ஏ கூட இதில் சிக்குவதில்லை!

--------------------------

If this #Original_license STOPs all accidents,
If #UP empowers and ensures the SAFETY of Women and Children,
If any #corrupt politician is HANGED for his corruption and crimes,
If the #Prime_minister STAYS in the country for 2 consecutive months
#Burnmealive 😂😂
---------------------------------------
இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்தவராக, பவுத்தராக, ஜெயினாக எதுவாக இருந்தால் என்ன? உயிர்கள் மதங்களைக் கொண்டு பிறக்கவில்லை! குழந்தைகள், மொட்டுவிடும் செடியைப்போன்று மனித உயிர்களாக மட்டுமே பிறக்கின்றனர், அவர்களைக் கொன்று இவர்களுக்கு என்ன ஆனந்தம் கிடைத்துவிட போகிறது? குழந்தைகளைக் கொன்று ஆனந்தம் அடைபவனை எந்த மதக்கடவுளும் மன்னிக்க மாட்டார்!
மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கொலைகள் செய்பவர்கள், அதன் பின்னே துணை நிற்பவர்கள் எல்லாம் வாழும் தகுதி இழந்தவர்கள்! ஆணாய் இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும், உலகெங்கிலும் அரசியல்வாதிகள் ஹிட்லரின் வீரிய பிம்பங்களாய் இருக்கிறார்கள்! Hell with these cannibals! 😞
அன்பும், காதலும் எப்போதும் பிச்சையாக இருக்கக்கூடாது, அது இருவருக்குமே இழிவைத்தரும்!
-------------------------------
சாராயம் விற்று, கல்வி விற்று, பெண்களை வைத்து வியாபாரம் செய்து, கொலைகள் செய்து, கொள்ளைகள் அடித்து, இப்படியெல்லாம் வன்முறைகள் செய்பவர்கள் அரசியலிலும், சமூகத்துக்காக குடும்பத்தை விட்டு, உயிர் பயம் விட்டு பாடுபடுவர்கள் சிறைக்கும், பின்பு தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்! டிராபிக் ராமசாமியின் சமூகத்துக்கான உழைப்பை, அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தை, மேடையில் பேசி கிழிக்கும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தரவில்லை, அந்த நேர்மையையும், துணிச்சலையும், திரையில் மட்டுமே வீரம் காட்டும் எந்த நடிகனும் காட்டவில்லை!
தமிழ்நாட்டுக்கு என்றுதான் விடிவுகாலமோ தெரியவில்லை!
#டிராபிக்_ராமசாமி
--------------------------

காதலிகளையும், மனைவிகளையும் அழகிய, பணக்கார, முட்டாள்களாக எதிர்ப்பார்க்கும் சில ஆண்கள், அந்த முட்டாள்களின் வழி பிறக்கும் பிள்ளைகளை, புத்திசாலிகளாக எதிர்ப்பார்க்கிறார்கள்! இவர்களையே உலகமென்று நம்பி ஏமாறும் காதலிகளும்/மனைவிகளும் லூசுப் பெண்களாகவே வைத்துக்கொள்ளப்பட்டு, வாழ்ந்துமுடிக்கிறார்கள்!
ஒட்டுப்புல் போல யாரையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல், சுயமரியாதையுடன் வாழ, பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறந்த கல்வியை சாத்தியமாக்குங்கள்!!!
#ஏட்டுச்சுரைக்காய்கள்_கறிக்கு_உதவாது!
---------------------------

விவசாயிகளாய் இருந்தாலும் மாணவ மாணவியர்களாய் இருந்தாலும், யாருடைய தற்கொலையும், மரணமும் அரசை ஒன்றும் செய்திடாது! இன்னும் சில வருடங்களில் இவர்கள் ஓட்டுக்கேட்டு வரும்போது, அவர்கள் கொடுக்கும் பணத்துக்கும், இலவசங்களின் வாக்குறுதிக்கும், வேட்பாளரின் சா(ஜா)திக்கும், மதத்துக்கும் மக்கள் ஓட்டுக்களை போடுவார்கள் பாருங்கள், அப்போதுதான் இத்தகைய எல்லா மரணங்களையும் நாம் வியாபாரமாக்கும் நம்முடைய அடிமாட்டு மனநிலை வெளிச்சமாகும்!
#அரியலூர்_அனிதா
----------------------------

மருத்துவ படிப்பு இல்லை என்றால் வேறு படிப்பு இருக்கிறது,
அனிதா செய்தது அறிவு கெட்டத்தனம்! - டாக்டர் கிருஷ்ணசாமி
தற்கொலையை நிச்சயம் ஆதரிக்கவில்லை, எனினும் இதுவரை நீங்கள் உட்பட, பல்வேறு பிரதானக் கட்சிகளும், லெட்டர் பேட் கட்சிகளும் அரசியலில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு எதையும் செய்யாமல் இருந்தாலும், இன்னமும் கூட அரசியலை விட்டு விலகாமல், அரசியலிலேயே நீடித்திருக்கும் போது, மருத்துவம்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தவறா மிஸ்டர் கிறுக் சாரி கிருஷ்ணசாமி?
#நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று நாடாகமாடி, மாணவர்களை இந்த நிலைக்கு தமிழக அரசு நிறுத்தியது அறிவுபூர்வமான செயலா?
#விவசாயிகள் வயிற்று வலியால் தற்கொலைச் செய்து கொண்டார்கள் என்றது போல, அனிதாவின் மரணத்திற்கு இன்னும் சில நாட்களில் மீடியாக்கள் "வழிகாட்டிகளால்" புதுவர்ணம் பூசும்!
#அரியலூர்_அனிதா #Anitha
---------------------------

மாண்புமிகு முதலமைச்சரே,
அந்த ஏழு லட்சம் எதற்கு முதலமைச்சரே?
இன்னும் எத்தனை லட்சங்கள் தரப்போகிறீர்கள் போன உயிரை மீட்பதற்கு?
விவசாயிகளுக்கு எத்தனை லட்சம் தரப்போகிறீர்கள்?
கூடங்குளத்து மக்களுக்கு, நெடுவாசலுக்கு, கதிராமங்கலத்துக்கு? 😞

28% சதவீதம் வரிகள் போதுமா? இல்லை 100% வேண்டுமா?
கூவத்தூரில் தொடங்கி, டெல்லியில் போராடி பெற்றுக்கொண்ட பதவியில், பலத்தில், கொஞ்சம் நிமிர்ந்து அந்தப்பெண்ணுக்காக, இதுபோல் கனவுகள் கலைந்து கலங்கி நிற்கும் பிள்ளைகளுக்காக, உங்களால் ஒரு துளி கண்ணீர் விட முடியுமா?
யார் செத்தாலும் நிவாரணம், கொன்றதே அரசுகள் எனும்போது, நிவாரணங்கள் போதுமா?
அரசு என்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு தாயைப்போல அல்லவா தாங்கி நிற்க வேண்டும், தகப்பனைப் போல வழிகாட்ட வேண்டும்? போட்டது ஒரு ஓட்டு, அதில் மூன்று முதல்வர்கள், நாற்காலியை பத்திரமாக பிடித்துக்கொண்டு எத்தனை நாட்கள் இப்படியே எல்லா மரணங்களுக்கும் நிவாரணம் கொடுத்து கடந்துப் போக போகிறீர்கள்? என்றாவது ஒருநாள் உங்களால் இந்தப் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக பார்க்க முடியுமா?
செத்தவள் ஒரு மாணவி, அவள் தலித்தா, வன்னியரா, கவுண்டரா, தேவரா என்று சாதி சாயம் பார்க்கும் மீடியாக்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், கல்வியைத் தரமானதாக, இலவசமாக கிடைப்பதற்கு சாத்தியப்படுத்துங்கள், 28% சதவீத வரியும், சாலையெங்கும் நிறைந்திருக்கும் சாராயக்கடைகளும் பணவிஷயத்தில் உங்களை கைவிடாது!
இந்தக்கடிதம் என்பது என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள் என்பதை விட, எத்தனையோ தமிழக மக்களின் மனக்குமுறலும், ஆதங்கமுமே!
"ஒன்றுமே நடக்காது, இவ்வளவுதான் அரசு" என்று எல்லோரும் நினைப்பது போல் இந்த ஏழு லட்சத்துடன் கடமை முடிந்தது என்று கைகழுவினால், ஏழு கோடி மக்கள் மனதில் ஆறாத தழும்பாய் உங்கள் ஆட்சி மாறிப்போகும்!
முதலமைச்சர் என்ற கீரிடம் இருந்தாலும், அடிப்படையில் நீங்களும் மனிதர்தானே, ஏதாவது ஒரு நிமிடம் நீங்கள் மக்களுக்காக சிந்தித்தால், இதுபோன்ற ஆத்மாக்களுக்கு அதுவே பெரிய மரியாதை, உங்கள் நற்காரியங்களுக்கு இது ஒரு ஆரம்பப்புள்ளியாய் இருக்கட்டும்!
நன்றி! வணக்கம்!
#முதலமைச்சர் #அரியலூர்_அனிதா #நீட்
------------------

சமூகத்துக்காக தன்னந்தனியாக போராடும் முதியவரை அறையும் காவல்துறை, ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு சல்யூட் அடித்து பாதுகாப்புக்கொடுக்கும் விந்தையான அமைப்பில், எல்லாவற்றிற்கும் வேடிக்கைப் பார்க்கிறோம்! வேடிக்கை மனநிலை தமிழகத்தின் சாபக்கேடு!
#டிராபிக்_ராமசாமி!
----------------
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு 16 ஆசிய பசிபிக் நாடுகளில் 18 மாதங்கள் ஊழல் நிலவரம் குறித்த ஆய்வில், ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்! லஞ்ச விகிதாச்சாரம் 69 சதவீதம்! இதற்கு முன்பு 76 ஆவது இடம், இப்போது முதலிடம்!
தீயாய் வேலை செய்திருக்கிறோம்!
#புதிய_இந்தியா #நயா_பாரத் #Transparency_International
----------------
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!