Thursday 16 November 2017

ஒரிஜினல்_லைசென்ஸ்

சாலையில் இன்னின்ன போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவலர்கள் பிடிப்பார்கள், தண்டனை வாங்கித்தருவார்கள், இதெல்லாம் சரி,
"சிக்னல் இயங்காத, எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லாத, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறக்கும் சாலையில், விதிமீறல்கள் செய்யும் சில நூறு வாகனங்களை, அவைகளில் பெரும்பாலும் விர்ரென பறக்கும் இருசாக்கர வாகனங்களும், "எந்த ரூலும் எங்கள ஒன்னும் செய்யாது" என்று செல்லும் பல்லவன் பேருந்துகளும், "சார் முந்தின நிறுத்தத்திலேயே அவர கவனிச்சுட்டேன்" என்று கடந்துச்செல்லும் லாரிகளுமென நிறைந்திருக்கும் நெடுஞ்சாலையில்,
சிக்னலின் ஒர் ஓரமாக அமர்ந்திருக்கும் அல்லது நடுவே நின்றிருக்கும் ஒன்றிரண்டு காவல்துறை அதிகாரிகள், அல்லது மூன்று நான்கு பேராக ஒர் ஓரத்தில் குழுமியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் எப்படி ஒருவரைக்கூட விடாமல் பாய்ந்து பாய்ந்து பிடிப்பார்கள்? ஓவர் ஸ்பீட் என்றும், ஹெல்மெட் இல்லையென்றும், விதிமீறல்களை எப்படி நிரூபிப்பார்கள்? கட்சிக்கொடிகளை பறக்க விட்டுக்கொண்டு சீறும் வாகனங்களை எப்படி துணிச்சலாய் மடக்குவார்கள்? டாஸ்மாக் கடைகளில் வாகன நிறுத்தத்தோடு கூடிய பார்களில் இருந்து வரும் வாகனங்களையெல்லாம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பறிமுதல் செய்து, பல்லாயிரக்கணக்கான வாகனங்களை எங்கே நிறுத்துவார்கள்? இப்படி எழும் எந்தக் கேள்விகளுக்கும் எந்த அடிப்படை ஆராய்தலும் இல்லாமல், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், ஒரே இரவில் காவல்துறையை சூப்பர்மேன்களாக்கி, ஒரிஜினல் லைசென்ஸ் மூலம் விபத்துகள் எல்லாம் குறைந்து போகும்போது, இந்த அரும்பெரும் யோசனையை எப்படி காப்பீடு பதிவு செய்து காப்பாற்றப்போகிறார்கள் என்பதே பெருத்த யோசனையாக இருக்கிறது!

#ஒரிஜினல்_லைசென்ஸ்

-------------------

சாலைகளின் தரமோ, ஆட்சியாளர்களின் மனமோ மாறும் வழிக்காணோம், இந்த லைசென்ஸ் எடுக்கும் நடைமுறையில், வாகன ஓட்டிகளுக்கு சில தொகுக்கப்பட்ட பிரசவ காட்சிகளையும், விபத்தினால் உறுப்பு இழந்தவர்களின் அனுபவத்தையும், மரணம் ஏற்படுத்திய விபத்துக்காட்சிகளையும், இறந்தவர்கள் குடும்பங்கள் அடைந்த மனவேதனையையும், இழப்புகளையும் தொகுத்து அதையெல்லாம் பார்க்க வைத்து பின் பிற நடைமுறைகளையும் முடித்து லைசென்ஸ் கொடுத்தால் என்ன? அப்படியாவது அவர்களுக்கு உயிர்களின் மதிப்புத்தெரியட்டுமே?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!