Thursday 16 November 2017

எந்தவேளையிலும் கவிதை

Image may contain: 1 person
ஒரு மாமரத்தின் நிழல்
மடியில் மலர்ந்துகிடக்கும் குழந்தை
வேப்பமரத்தின் காற்று
தந்தையின் நம்பிக்கை
தாயின் பெருங்கருணை
காலைச்சுற்றும் பூனை
முகம் நக்கும் நாய்
பரந்தவெளி மைதானம்
வெளிறிய நீலவானம்
மழைச்சுமந்த கருமேகம்
ஊர் நனைக்கும் மழை
இரவு நேரத்து ஈரக்காற்று
யாருமற்ற மாலைநேரத்தின் பொழுது
மெல்லிய சாரல் நனைத்த மொட்டைமாடி
இமைக்காமல் பார்க்கும் பசு
நிபந்தனைகளற்ற ஒரு கரம்
துள்ளிக்குதிக்கும் கன்று
மனம் மயக்கும் நீங்காத இசை,
இது அத்தனையும்
அல்லது ஏதோ ஒன்றோ
போதுமானதாய் இருக்கிறது
கவிதையென்று
மனப்பக்கங்களை
நிரப்பிக்கொள்ள
எந்தவேளையிலும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!