Thursday 16 November 2017

கீச்சுக்கள்

"இந்தியா போன்ற நாட்டில் ஊழலை ஒழிக்கமுடியாது, 120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் மாற்றம் சாத்தியமில்லை", இதெல்லாம் கேட்க கிடைக்கும் கூற்றுக்கள், யோசித்துப்பார்க்கிறேன், மக்கள் தொகையில் முப்பது கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியா, பிரிட்டிஷின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது, வேலூர் புரட்சித்தொடங்கி, ஜாலியன் வாலாபாக் படுகொலை வரை முப்பது கோடி ஜனத்தொகை பீரங்கிகளுக்கு எப்படி பதில் சொல்லும் என்று யோசித்து வியாக்கியனங்கள் பேசவில்லை, எனினும் முப்பது கோடியில் மக்கள் தொகையாக இருந்த இந்தியா, இன்று 120 கோடியில் புழுக்களின் தொகையாக மாறியிருப்பதால், ஊழலை ஒழிக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்புகிறது! எதை விரும்புகிறோமோ அதை நம்புகிறோம், எதை நம்புகிறமோ, அது நடக்கிறது! மாற்றத்தை சர்வ நிச்சயமாக விரும்பி, நம்பும்போது, இந்தியா போன்ற நாடு, மனிதர்களின் நாடாக மாறும்!
--------------

பெரும்பான்மையான வட இந்தியர்கள் அபார தேசியமொழிப்பற்றுடையவர்கள், அவர்கள் ஆங்கிலத்தைக் கூட இந்தியில்தான் பேசுகிறார்கள்! 😜
---------------

பெரிய ஐடி நிறுவனங்களுக்கு தமிழகம் நிலம் தந்து, வளம் தந்து, குறிப்பிட்ட காலம் வருமான வரி விலக்கு தந்து, வேலை வாய்ப்பு பெருக்குவதாய் நினைத்துக்கொள்ள, நிறுவனங்களோ 90% சதவீதம் வட இந்தியர்களை பணிக்கமர்த்தும், எங்கு திரும்பினாலும் வந்தாரை மட்டுமே வாழ வைக்கிறது தமிழகம்!
----------------
எங்கும்
எதிலும்
எப்போதும்
எவனோ / எவளோ -வின்
கேள்வி தீக்குச்சியில்
மட்டுமே
எந்தவொரு மாற்றமும்
பிறக்கிறது!

--------------------

ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது, ஒவ்வொரு வருடமும் மழைநீர் மேலாண்மையில் பணிகள் செய்தோம் என்று பொய்கள் சொல்லப்படுகிறது, ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது, ஒருநாள் இரண்டுநாள் அரசு இயந்திரம் மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சையிடுகிறது! பிஸ்கெட்டுக்கு ஒரு நிதி, பிரட்டுக்கு ஒரு நிதி என்று கணக்கெழுதிவிட்டுச் செல்லும் அரசிடம், மழைமேலாண்மை நிதி பற்றி யாரும் கேட்டுவிடக்கூடாது, மழையில் இறங்கி நடந்து வந்து பிஸ்கெட் தருவதே பெரிது என்பார்கள் சாதிச்சார்பு, கட்சிசார்பு சென்ட்ராயன்ஸ்!
"ஏ தாழ்ந்த தமிழகமே!" நூல் நினைவுக்கு வருகிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!