Thursday 16 November 2017

பொய்களின்கூடு

Image may contain: 1 person



நீ வருவதாய் சொன்ன
ஏமாற்றங்கள் போதும்
தருவதாய் வைத்திருந்த
முத்தங்கள் போதும்
கோர்த்துக்கொண்டிருந்த
வார்த்தைகள் போதும்
பயன் கருதி பேசும்
நிமிடங்கள் போதும்
புகழுக்காக செய்யும்
நாடகங்கள் போதும்
நேரமில்லையெனும்
அலட்சியங்கள் போதும்
ஆணவமாய் நடத்தும்
அதிகாரங்கள் போதும்
அலைபாயும் மனம் மறைக்க
நீ கூறும் பொய்கள் போதும்,
போதும் போதும் போய் வா,
உன் புனைவுகளோடு!
விட்டு விடுதலையாகிறேன்
நான் சிட்டுக்குருவியாக,
சிறைப்படுத்தும் காதலிலிருந்து!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!