Thursday, 16 November 2017

டெங்கு

கொசு ஒழிப்பு பணிக்காக 16 கோடி ஒதுக்கீடு என்று சுகாதார துறை அமைச்சர் கூறியிருக்கிறார், இதில் நிலவேம்பு கஷாயம், மருத்துவக் காப்பீடு போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, குப்பைகள் மேலாண்மைப் பற்றி ஒன்றுமே காணோம்!

ஆட்சி தக்கவைக்கும் போராட்டத்தில் அரசு இருக்க, மாநகராட்சி எந்திரங்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது!

ஒர் இடத்தில் குப்பையை எடுக்கும் நகராட்சி வாகனங்கள், அதை வீதி முழுக்க இறைத்துப்போகும், ஒரு இடத்தில் இருந்து எடுத்து, வேறொரு இடத்தில் சேர்த்து வைக்கும், இன்னமும் கூட குப்பைகளில் மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்து நடைமுறை கூட இல்லை, இவ்வளவுதான் குப்பை மேலாண்மை தமிழகத்தில்! 

இது மழைக்காலம், நேற்று பெய்த ஒன்றிரண்டு மணிநேர மழையில், பல வீதிகள் வெள்ளக்காடாய் ஆகின, சாலையில் விளக்குகள் எரியவில்லை, பல இடங்களில் இன்னமும் ஒயர்கள் அறுந்து தொங்குகின்றன, பெரும் பள்ளங்களும், மேடுகளுமாய் பல சாலைகள், மழைநீர் சேகரிப்போ, கழிவுநீர் மேலாண்மையோ, குப்பைகளின் மேலாண்மையோ, சாலைபாதுகாப்போ எதுவும் சரிவர இல்லை!

வருமுன் காப்பதை விட வந்தபின்னர் செலவழிக்கும் நடவடிக்கைகளே பெரும்பாலும் அரசின் "விருப்பமாக" இருக்கிறது!

இந்த 16 கோடியில், மதுரை கொசுக்களுக்கு சரியான பங்கீடு போகததால், அவைகள் வேறு, வாகனங்கள் ஏறி சென்னைக்கு வந்து டெங்கு பரப்புகின்றன என்று இத்தனைபேர் செத்தப்பிறகு, அதிகாரிகள் கண்டுப்பிடித்திருக்கிறார்கள்! கொசுக்களின் இந்த நடவடிக்கையை வன்மையாய் கண்டிப்பதைத் தவிர வேறு ஏதும் வழி நமக்கிருப்பதாய் தெரியவில்லை! இஸ்ரேலின் யூத விஞ்ஞானிகளை விட, பெரும் தமிழக விஞ்ஞானிகளால் ஆளப்பட்டும், நாள்தோறும் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் தமிழகம் முன்னிலைக்குச் சென்று கொண்டிருப்பது பெரும் வியப்பே!

--------------------

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 20 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்! - செய்தி
அப்படியே குப்பைகளை தரம் பிரிக்காமல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் குவிக்கும், குப்பைகளை சரிவர அகற்றாமல் இருக்கும் நகராட்சிக்கு,
சாலைகள் தோறும் குழிகளைத்தோண்டி அதை சரிவர மூடாமல் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு,
நீர்நிலைகளை பட்டா போட்டுக்கொடுத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு,
சாயக்கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கும் நிறுவனங்களுக்கு, அதற்கு அனுமதி கொடுத்து, கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அரசுக்கு,

இப்படி டெங்கு முதல் மர்ம காய்ச்சல் வரை சுகாதாரம் கெட்டுப்போக, மெதுவாய் வேலைகள் செய்யும் சுகாதாரத்துறைக்கு,
இவர்களுக்கெல்லாம் எச்சரிக்கை நோட்டீஸ் தராமல், மக்களுக்கு நோட்டீஸ் தருவதற்கா அந்த 28 சதவீத ஜிஎஸ்டி வசூல்???
பட், அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலப்படி, அந்தக்கொசுக்களை ஏஸி பஸ்ஸில் ஏற்றிக்கூட்டி வந்த பஸ் ஓனர்களுக்கு இன்னமும் நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்பதை மென்மையாக எடுத்துக்கூறுகிறோம்! 😜😝
#டெங்கு


No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...