Thursday, 16 November 2017

கீச்சுக்கள்

பல காலம் களத்தில் போராடிய
டிராபிக் #ராமசாமிகளைவிட
#திரையில் போராடிய நாயகர்களே
நாட்டுக்கு நம்பிக்கை நாயகர்களாக
தெரிவது
தமிழகத்தின் சாபம்!

---------------

ஓநாயிடம் ஆட்டுக்குட்டியை ஒப்படைத்துவிட்டு, ஆட்டிக்குட்டியிடம் நலம் விசாரிக்கும் உலகம்! 
-------------

பிறரின் துயரங்கள் எல்லாமும் வெறும் காட்சிகள்தான் பார்வையாளர்களுக்கு, அந்தப் பார்வையாளர்களாக உறவுகளும், நட்புகளும் அமைந்துவிடும்போது, அதுவே ஆறாத துயரமாகலாம், எனினும் மரணம் வரை வாழ்ந்து கடக்க முடிவெடுத்துவிட்டால், நம்முடைய துயரங்களுக்கு நாமும் கூட பார்வையாளராக மாறிவிடலாம்!
--------------

டிடிவி தினகரன் முக்கியமான செய்தி சொல்லியிருக்கிறார், "இந்த ஊழல், ரெய்டு, அமலாக்க நடவடிக்கை இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம், என்ன செய்ய முடியும், தூக்குலயா போடுவாங்க?" இப்படி நீள்கிறது வசனம், பட்டவர்த்தனமான உண்மை, மக்கள் பணத்தைச்
சுரண்டி, ஆட்சி அலங்கோலங்கள் செய்து, ஊழல் செய்து, மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டி, உயிர்களைக்கொன்று, இன்னும் எத்தனையோ கொடுமைகளை கட்சிகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்தாலும், எதற்காகவும் எந்த ஒரு அரசியல்வாதியும், அதிகாரியும் உடனடியாக தண்டிக்கப்படவில்லை, தூக்குமேடைக்கு அனுப்படவில்லை, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை, அதிகாரம், ஆட்சியில் நிரந்தர தடை பெற்றதில்லை, நாடு கடத்தப்பட்டதும் கூட இல்லை, இத்தனை இல்லைகள் இருக்கும்போது, ரெய்டுகளும், வழக்குகளும், எந்தவொரு அரசியல்வாதியையும் எதுவும் செய்திடப்போவதில்லை, இதில் சட்டமாற்றம் ஏற்படும் வரை, கில்லித்தண்டு விளையாட்டுதான் ரெய்டுகள் என்னும் கண்ணாமூச்சிகள்!
அவர்கள் விளையாடுகிறார்கள், நாம் வேடிக்கைப்பார்க்கிறோம்!
-----------

ஜல்லிக்கட்டுக்கு, நீட் டை நீக்குவதற்கு, மழைநீர் வடிகாலுக்கு, காவிரி மேலாண்மைக்கு, கூடங்குளத்துக்கு, மீத்தேன் தடைகளுக்கு என எதற்கும் போராடாமல், சாராயக் கடைகளை நெடுஞ்சாலைகளில் திறக்க போராடும் ஓர் அரசை, போராடி வெற்றிப்பெற்ற ஓர் அரசை இந்தத் தலைமுறை பெற்றிருக்கிறது!
இனி விளிம்பு நிலையில் உள்ள பிள்ளைகளின் கல்விக்கனவுகள், நாள்தோறும் குடிகார அப்பன்களிடம் மிதிப்பட்டு, கூலிவேலை செய்து பள்ளிக்கு அனுப்பும் அம்மைகளை பொறுத்தே எப்போதும் போல தொடரும், அல்லது தேயும், நெடுஞ்சாலைகளில் விபத்துகள் இன்னமும் அதிகரிக்கும்!
குடிக்கொடுத்து, மக்களின் வாழ்க்கையை அழித்தே தீருவோம் என்பதுதான் தமிழகத்தின் குடியாட்சி! வாழ்க "குடி" மக்கள், வாழ்க "குடி"யரசு!
--------------

பாரத் மாதா கீ ஜெ என்றும், தேசிய கீதத்துக்கு திரையரங்குகளில் எழுந்து நின்றும், சீனப்பொருட்களை தவிர்த்தும் 120 கோடி இந்திய ஜனத்தொகை தேசப்பற்றை காட்டுவதை விட, பாரளுமன்றத்தில் உள்ள அந்த 250 ம், 545 ம், அந்தந்த மாநில சட்டமன்றங்களில் உள்ள "எண்களும்" குறைந்தபட்ச தேசப்பற்றை மனதில் உணர்ந்தாலே இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...