Thursday 16 November 2017

பிச்சை

#அணுக்கதை
அந்த இராயப்பேட்டை சிக்னலில், விபத்தில் கையிழந்த தன் தந்தை பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தியதை, அந்தச் சிறுவன் அவமானமாய் கருதினான், சத்துணவு சோறு இல்லையெனினும் கல்விக்காக பள்ளிக்கூடம் சென்று படித்து, தட்டுத்தடுமாறி பள்ளிக்கல்வி முடித்தவன், அப்பனின் பிச்சைத்தடுத்து, ஒரு சிறுமுதலில், பலகாரக்கடையொன்றை ஆரம்பிக்க, அங்கே சில வெள்ளை வேட்டிகளும், படித்து பணிக்கு வந்த காக்கிகளும், அவனிடம் வந்து இலவச பிச்சைக் கேட்டது, பிச்சை என்பது அழுக்குடையில் மட்டுமல்ல, மாசடைந்த மனதிலுமுண்டு என்று உணர்ந்துக்கொண்டான்!
#பிச்சை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!