Thursday 16 November 2017

பூமி

சில நேரங்களில் சில நாய்களுக்கும், பூனைகளுக்கும் இரக்கப்படும்போது, "மனுஷனுக்கே ஒன்னுமில்ல, இதுங்களுக்கு இரக்கப்பட்டு என்னவாகப் போகுது?" என்ற விட்டேத்தியான பதில்களை கடந்ததுண்டு, மாட்டுக்கறி பிரச்சனை வந்தபோது, உணவு என்ற அடிப்படையை மீறி, வீம்புக்காக, சில மனிதர்கள் மாடுகளை, கன்றுகளை வெட்டிய செய்திகளைக் கடந்ததுண்டு! மனிதர்களையும் கூட சிலமனிதர்கள் சாதிய அடிப்படையில் மிருகங்களைப் போல நடத்துவதும், கொல்வதும் உண்டு, உண்மையில் யோசித்துப் பார்த்தால் இந்த உலகம் மனிதர்களுக்கானதல்ல, இது பிற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனவைகளுக்கும், நீந்துபவைக்குமானது!
இந்த உலகத்தின் இயக்கம், பிற உயிர்கள் அழிந்துப்போனால் நின்றுபோகும், மனித உயிர்கள் அழிந்துப்போனால் இந்தப் பூமிக்கு கேடு வராது, ஏனேனில் மனித உயிரினத்தைப் போன்று எந்த உயிரினமும் வாழும் பூமிக்கு கேடு விளைவித்ததில்லை, மனித இனத்தைப் போன்று கண்மூடித்தனமாக உணவுச்
சங்கிலியை அழித்ததில்லை, ஆதலால் இந்த உலகம் பிற உயிர்களால் இயங்குகிறது, உணவுச்சங்கிலியை மதித்து, உயிர்களை வாழவிட வேண்டும், உணவு தவிர்த்து, அலங்காரத்துக்காகவும், அழகுக்காகவும், வீம்புக்காகவும் அதை வெறிப்பிடித்த மனிதர்களாய் வேட்டையாடுதல் தவிர்த்து வாழ்ந்தால், இந்தப்பூமி இன்னும் பல தலைமுறைகளுக்கு மிச்சமிருக்கும்!
#பூமி #Earth

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!