Thursday 16 November 2017

உணர்வுகள்

நேற்று பார்த்த அதே சிறுவர்களில் இப்போது இரண்டுபேர், புன்சிரிப்புடன் நடந்து வந்துக்கொண்டிருந்தார்கள், வழக்கமான நலவிசாரிப்பாய், "என்னடா சாப்பிட்டிங்களா?" என்றேன்! பகீரென்ற பதிலை சொன்னார்கள், "இல்லேக்கா, அம்மாவுக்கு கூலி நைட்டுதான், சமைக்கலக்கா, நைட்டுதான் சாப்பாடு" அபத்தம் என்றாலும், கேட்டேன், "ஏண்டா இட்லிக்கடையில டிபன் வாங்கிக்கறதுதானே?"
"காசு இல்லேன்னு சொல்லிட்டாங்கக்கா" என்று சொல்லிவிட்டு, தலைகுனிந்து நகர்ந்தார்கள்!
அப்பா குடிக்க, அம்மாவின் கூலிவரும்வரை, பசியை விரட்ட இந்தப்பிள்ளைகள், வீதியில் விளையாடுகிறார்கள், கால்போன போக்கில் நடக்கிறார்கள், என்னால் இவர்களின் வறுமையை விரட்ட முடியுமா, தெரியவில்லை, அந்தநேரத்து பசியை விரட்டலாமென்று, அவர்களை அழைத்து, ஆளுக்குக்கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்கள் அம்மாவிடம் கொடுத்து, மளிகைச்சாமான்களும், அவர்களின் பசிக்கு ஏதேனும் வாங்கிக்கொள்ள சொல்லி வீட்டை நோக்கி அனுப்பிவைத்தேன்! குடிகார அப்பன்களிடம் சிக்காமல், அவர்களின் அம்மாவின் கைகளில் காசு கொடுப்பது இனி அவர்களின் சமர்த்து!
இவர்களைப் போன்றவர்களுக்காகத்தான் #அனிதா என்ற மாணவி இறந்தது, அல்லது கொல்லப்பட்டது! அரசாங்கப்பள்ளியில் படிக்கும் இந்தப்பிள்ளைகளுக்கு கல்வி மட்டுமே கடைத்தேறும் வழி, அதை அடைத்துவிட்டு, #நீட் வகையாறாக்களை உள்நுழைத்து, வாய்ப்பு மறுத்து, #சாராயக்கடைகளை திறந்து ஆட்சிசெய்கிறார்கள் படித்த, அல்லது படித்ததாய் சொல்லிக்கொள்ளும் தமிழக ஜாம்பவான்கள்!?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!