Saturday 20 April 2019

Bansterlite

ஜூலை மாதம் 2014 ஆம் வருடம்
“ஆந்திர மாநிலம் கிழக்கு கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எனும் கிராமத்தில், கெயில் நிறுவனத்தின் (இந்திய எரிவாயுக் கழகம்) இயற்கை எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் தீயில் கருகி பலியாயினர்”
26 ஆம் தேதி ஏப்ரல் மாதம், 1986 ஆம் ஆண்டு
உக்ரைன் சோவியத் யூனியனில் புகழ்பெற்ற செர்னோபில் அணு விபத்து ஏற்படுகிறது. உடனடியாகவும், அதற்கு பின்பும் நூற்றுக்கணக்கான பேர்கள் அணுவினால் கொல்லப்படுகிறார்கள்!
நிற்க! இப்படி உலகளவிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அழிவை ஏற்படுத்திய அணுவுலைகள், கெயில், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் திட்டங்கள் எல்லாம் மொத்தமாய் தமிழகத்தில், இதற்கு, வரலாற்றில் அடுத்தக்கட்டமாக;
மே 22 2018 ஆம் ஆண்டு
ஸ்டெர்லைட் - வேதானந்தா குழுமம் - முதலாளிகள் - அகர்வால்கள்
தனியாருக்காக தமிழக அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி 15 க்கும் (எண்ணிக்கை ஏறிக்கொண்டு) மேற்பட்டவர்களை கொன்றது!
ஜல்லிக்கட்டு வன்முறை, இப்போது இந்த வன்முறை, இன்னமும் மிச்சமிருக்கிற ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட சாதனைகள் தொடரும், அதற்கு காவல்துறையும் பக்க பலமாக இருக்கும், அத்தனையும் செய்துவிட்டு தைரியமாக ஓட்டுக்கேட்டு வருவார்கள், மக்களின் மறதியின் மீதும், சாதிப்பற்றின் மீதும், எதையும் காசுகொடுத்து வாங்கிவிடும் சந்தை நிலவரத்திலும் இவர்களுக்கு அசாத்திய நம்பிக்கையுண்டு!!!
#Bansterlite

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!