Saturday, 20 April 2019

பெரிய திருடர்கள்

நம்முடைய காவல்துறைக்கு அசாத்திய திறமை இருக்கிறது, முதல்வர், பிரதமர் வருகிறார்கள்
என்றால் ஒரு சின்ன தடங்கல் கூட இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள், ஒரு கலெக்டரின் மொபைல் போன் காணாமல் போய் விட்டால் ஒரே நாளில் கண்டுபிடித்து விடுவார்கள், எந்தக் காட்டுக்குள் எந்த வீரப்பன் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள், மெரீனாவில் தடையுத்தரவு என்றால் இரண்டு சாலைகளுக்கு முன்பே ஒரு ஈ காக்கையை கூட நுழைய விட மாட்டார்கள், ஒரு மாபெரும் கூட்டத்தை கலைக்க வேண்டுமென்றால், மெரீனாவில் கலைத்ததை விட வேகமாய் கலைத்துவிடுவார்கள்! 

தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் வரை வரவிட்டு, பின்பு ஸ்னைப்பர்கள் வைத்து சுடுவதில் எல்லாம் திட்டமிடல்கள் இல்லை, மக்கள் தான் அராஜகம் செய்தார்கள், எல்லா காணொளிகளும் அப்படித்தான் வரும், பின் அதில் வந்த அனைவரும் எந்த வயது என்றாலும் தீவிரவாதிகள், அப்பாவி அரசாங்கத்துக்கும், காவல்துறைக்கும் இதில் ஒரு பங்கும் இல்லை, ஆனால் இனி எந்தப் போராட்டம் என்றாலும் ஸ்னைப்பர்கள் நிச்சயம் என்ற பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள், ஸ்டெர்லைட் ஆலை, வேறு எதாவது விஷ ஆலை, நாடு முழுக்க அணுவுலைகள் என்று எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் அமைத்துக்கொள்ளலாம், முழுதாய் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் வரை ஆட்சி செய்துகொள்ளலாம், பின்பு பினாமி சொத்துக்கள் இருக்கும் தேசத்துக்கு சென்று விடலாம்!

தமிழ்நாட்டின் நான்கு மூலைகளிலும் அழிவுத்திட்டங்களை செயல்படுத்தி, மக்களை போராட்டக்காரர்களாக்கி, அவர்களை நடுவீதியில் சுட்டுக்கொன்று, ஒரு பக்கம் அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தி, மறுபக்கம் முதலை கண்ணீர் வடித்து நிவாரணம் தந்து, அரசு வேலை தந்து அடிமையாக்கும் இந்த சாணாக்கியத்தனம், சாணாக்கியனே அறியாததது
இத்தனை உயிர்கள் போராட்டங்களில் பலியாவது எதற்கு என்று எண்ணினால், நாட்டின் வளங்களை காப்பதற்காக, அரசு இதைச் செய்தது எதற்காக என்றால் தனியார் முதலாளிகளுக்காக, இந்த நாடு சீரும் சீறப்புமாய் இருக்கட்டும், சுட்டுக்கொள்ளும் காவல்துறைதான் நண்பர்கள், சுடச்சொல்லும் அரசுதான் நம்முடைய ஆட்சியாளார்கள், எது எப்படி இருந்தால் என்ன அதுதான் செத்தபிறகு காசு வருகிறதே, போதும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...