Saturday 20 April 2019

அவளின் மரணம்

நேற்றைக்கு
முன்தினம்
பிணங்கிச்
சென்றிருந்தான்
மனதால்
சுணங்கி
இருந்தவளுக்கு
மருத்துவம்
பிடிக்கவில்லை
நேற்றைக்குமில்லை
இன்றைக்குமில்லை
என்றானபின்
எப்படியிருக்கிறாய்
என்று அழைக்க
ஏதோ ஒரு
தோழமையுடன்
கதைத்துக்கொண்டிருந்தவன்
நேரமில்லையென்று
அலட்சியப்படுத்த
உடல் உபாதையால்
துடித்துக்கொண்டிருந்தவள்
இனி
என்னால்
உன் நேரம் வீணாகாதென்று
அழைப்பை துண்டித்து
நிரந்தர துயிலொன்றை
வேண்டிச் சரிய
கண நேரத்தில்
தாங்கிக்கொண்டது
பூமி தாயாக!

#மரணம்



No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!