Saturday 20 April 2019

அன்பு



குழந்தையின்பால்
தாய்க்குள்ள
பிரியத்தைபோல

பாலைவனத்தில்
தாகத்தில் தவித்தவனுக்கு
கிடைத்த
நீரைப்போல

வானம் பார்த்த
பூமிக்கு
பருவத்தே பொழிந்த
மழைபோல

மழைமேகத்துக்கும்
காற்றுக்குமுள்ள
நேசத்தைப்போல

நெய்தல்
நிலத்துக்கும்
மீனுக்குமுள்ள
பந்தத்தைப்போல

குறிஞ்சிக்கும்
மலைகளுக்குமுள்ள
பசுமையை
போல

உனக்கும்
எனக்குமிருக்கிறது
அன்பு!


Image may contain: one or more people

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!