Saturday 20 April 2019

தாழ்வுமனப்பான்மை

“அந்தப்பொண்ணுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை, எங்க மாமா பொண்ணுக்கு கலர் கொஞ்சம் கம்மி, அட அவ ரொம்ப குண்டு”, இப்படியெல்லாம் பெண்கள் திருமணத்திற்கு பின்பே அதிகம் தத்தமது உறவுகளிடம், குறிப்பாக கணவர்களிடம் கதைக்கிறார்கள், எப்போதும் உடலழகை / புற அழகை வைத்தும், அடுத்தவரை மட்டம் தட்டித் தம்மை மேம்படுத்திக்காட்ட முனையும் மனநிலைக்குத்தான் “#தாழ்வுமனப்பான்மை” என்று பெயர், அதுவும் தமது துணையிடமே அக அழகை விசாலப்படுத்துதலை விடுத்து, தமது புற அழகை அடுத்தப்பெண்களுடனான ஒப்பீட்டில் மேம்படுத்திக்கொள்ளும் அந்த திருமண உறவில் அப்படியென்ன நம்பிக்கை இருந்துவிடப்போகிறது, கடமைக்காகவும் காமத்துக்காகவும் சேர்ந்திருப்பதைத் தவிர? 

“மனதில் வரும் ப்ரியம்தான் காதல் என்றால் நாய்க்குட்டியுடன் வருவதும் காதல்தான், உடலில் வரும் ஆசைதான் காதல் என்றால் விலைமாதுவுடன் வருவதும் காதல்தான்”, என்று யாருடைய வரிகளாகவோ படித்தேன், மனம், உடல் இணைந்தாலும், காதலும் திருமணமும் நீடிக்க “பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும், ஆழ்ந்த அன்பும்” அவசியம், அது இல்லாத போதே “அழகுக்கான ஒப்பீடுகள்” சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் தேவைப்படுகிறது, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள அடுத்தவரை புறம்கூறுதல், இல்லாததை இருப்பதாக கூறுதல், எப்போதும் பொய்களை கட்டவிழ்த்தல், ஒருவர் அனுமதியில்லாமல் புற அழகை வர்ணித்தல் எல்லாம் மிக மோசமான மனநிலை, அப்படி நிலைநிறுத்திக்கொள்ளும் உறவெல்லாம் சுவைப்பதில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!