Saturday 20 April 2019

சுயநலம்

ஆற்றில்
மணல் திருடி
வறண்ட ஆறென்று
மரங்களை
விடாமல் வெட்டி
பொட்டல் வெளியென்று
காற்றில்
அமிலங்கள் கலந்து
மழைப் பொய்த்ததென்று
வளங்களை
உறிஞ்சி
பாலை நிலமென்று
விடாமல் தூற்றும்
மனிதர்கள்
பயனில்லை எனில்
பிற மனங்களையும்
உயிர்களையும்
கொல்வார்கள்
அதில் பால் சுரந்தாலும்
பால்மணம் நுகர்ந்தாலும்!

#சுயநலம்


Image may contain: one or more people

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!