Saturday 20 April 2019

மனம்

இன்று உறங்கி நாளை எழ முடியாமல் போனாலும், நேசித்தலில் குறை வைக்கவில்லை, யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்ற எண்ணம் போதும், நிம்மதியாய் விடை பெற, வாழ்தல் அறம்தான், தெளிந்த மனமும் சட்டென்று வாய்க்கும் மரணமும் கூட வரம்தான்!
--------------------------------

அன்பு வேண்டியோ, விரும்பியோ வருவதில்லை,
அதையும் எதையும் எதிர்ப்பார்க்காமல், தன்னை தானே நேசித்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் துயரேதும் இல்லை!
--------------------------------
மனம் நிறைந்திருந்தாலும், வெறுத்துப்போனாலும் வார்த்தைகள் அற்றுப்போகும், முன்னதில் நெகிழ்ச்சி, பின்னதில் வெறுமை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!