Saturday 20 April 2019

வாழாமல் போனவள்

உனக்கு
வலிக்கவில்லையா
என்கிறான்
வலியில்லாத இடம்
தெரியவில்லை
என்கிறேன்
ஏன் அழவில்லை
என்கிறான்
எதற்கெல்லாம்
அழவேண்டும்
என்கிறேன்
இருக்கும்
இடைவெளியில்
சிரித்துவிடு
என்கிறான்
இடைவெளிகள்
உறக்கத்தால்
நிரம்புகிறது
என்கிறேன்
எப்போதுதான்
சிரிப்பாய்
என்கிறான்
ஒரு மீளா
உறக்கத்திற்கு
முன்போ
பின்போ
என்கிறேன்
ஒரு மலர்
வளையம்
வைத்துவிட்டு
நகர்கிறான்
அந்தக்
கல்லறையிலிருந்து
மௌனமாக
நான்
சிரிப்பதை
காணாமலேயே!


No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!