Saturday 20 April 2019

தோற்பதில்லை-தேய்வதில்லை


எதிர்மறை வார்த்தைகளில்
துவண்டு
தொடர்ந்த நம்பிக்கையில்
தோற்று
நீர்த்த எதிர்ப்பார்ப்புகளில்
வெறுமையுற்று
“யாரும் இல்லை நான்
யார் நான்?”
என்ற குழப்பத்தில்
சூன்யத்தை
வெறித்து
வெறுமையாய்
புன்னகைக்கும் காலத்தில்
“என்ன ஆச்சு?
நான் இல்லையா உனக்கு?”
என்றொரு குரல்
வருகிறது
அப்பனுக்கு பிறகு
அண்ணனின் குரலாக
தோழமையின் குரலாக
காதலின் குரலாக
பெற்றவரின் குரலாக
எங்கேயும்
ஒலிக்கலாம்
யாருக்கும்,
யாருமற்றவருக்கோ
அது கடவுளின் குரலாக
மனசாட்சியின் குரலாக
ஒலிக்கும்
அன்பு தோற்பதில்லை
அன்பின் குரல்களும்
தேய்வதில்லை!


Image may contain: 2 people, people smiling, closeup and outdoor

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!