Saturday 20 April 2019

வெளிச்சக்கீற்று


ஏகாந்தமாய்
இருள் மேகங்கள்
சூழ்ந்த வானை
பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒற்றைக்காகம்
போலிகள் சூழா
இந்தத் தனிமையும்
வரம்தானோ?
போதியாய் மாறியது
அந்தக் காகம்
எனக்கிந்த வேளையில்!
அதோ
மெல்லியதாயொரு
வெளிச்சக்கீற்று
வானில்!


Image may contain: one or more people and bird

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!