Saturday 20 April 2019

நியாயப்படுத்திக்கொள்வோம்

ஸ்னைப்பர்
குண்டுகளை வைத்து
வீழ்த்தியபோது
அவர்களை
நக்ஸலைட்டுகள்
என்றும்,

அவ்வப்போது
திருட்டு வழக்குகளும்,
கஞ்சா வழக்குகளும்,
குண்டர் தடுப்புச்சட்டங்களும்
பாய்ந்தபோது,
அவர்களை
திருடர்கள்,
பொது அமைதிக்கு
சேதம் விளைப்பவர்கள்
என்றும் கூறி
நம்முடைய கைக்கட்டி
வேடிக்கைப்பார்க்கும்
நிலைக்கு
காரணங்கள்
தேடிக்கொண்டோம்


பல லட்சம் மரங்கள்
அழிக்கப்படும்போது
மரண ஓலம் கேட்காமல்
காதுகளை மூடிக்கொண்டு
சாகும் மரங்களை
நக்ஸலைட்டுகள் என்றோ
பொது வழியை
அடைத்துக்கொண்டு
அமைதிக்கு பங்கம்
ஏற்படுத்தியவர்கள் என்றோ
வளர்ச்சி வீக்கம் என்ற
பொய்களைக்கொண்டோ
இதை நியாயப்படுத்திக்கொள்வோம்
ஏ, அடிமை தேசமே! 😓😓😓

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!