Saturday 20 April 2019

கீச்சுக்கள்

அழகியலுக்கு வாழ்க்கை
சிறிதுகாலம்தான்
அக்குறுகிய காலமும் கூட  
அழகியல்தான்!
--------------------------------------

மனிதர்கள் புழங்காத வீடுகள்
சிதிலமடைதல் போல, 
அன்பு இல்லாத மனங்களும் 
பாழடைகிறது!
-----------------------------------

இந்தப் பரந்த உலகில் பசிக்காக திருடுபவர்களுக்கு மரணத்தையும், வசதிக்காக திருடுபவர்களுக்கு, பதவியையும், வெளிநாட்டு வாழ்க்கையையும் பரிசாக தருகிறோம்! அறம் சார்ந்த பழம் பூமியில் பணம் சார்ந்த மனிதர்களால், நீதிக்கு பெரும் கேடு!
------------------------------ -----------
பெண்ணின் மனம்
புரியாத புதிர் என்பதும்
ஆணாதிக்கத்தின் வேரூன்றிய சாயலே! உணர்வுகளை மதிப்பவன்,
அம்மா முதல் சகோதரி, நட்பு தொடங்கி நேசிக்கும் பெண் வரை, பெண்களின் மனம் புரிந்துக்கொள்வான்!
------------------------------------------


நாள்தோறும் கொலைகள் எங்கோ நடந்தேறுகிறது, 
சில உடல்களின் மீதும், 
 பல மனங்களின் மீதும்!
--------------------------------------------------


எப்போதும் எதிலும் ஆதாயம் மட்டுமே தேடும் மனிதர்களுக்கு, நேசிப்பவர்களுக்கான நேரம் ஒதுக்குதல் என்பது தேவையற்ற ஆணிதான்!
------------------------------------


இந்த உலகத்தில் போலியாய் நேசிக்க மனிதர்களால் மட்டுமே முடியும், அது ஒருபோதும்
விலங்குகளுக்கு கைவருவதில்லை!
-------------------------------------

எப்போதும் அன்பாய் இருப்பவர்களை, உலகம் பிழைக்கத்
தெரியாதவர்கள்
என்று ஒதுக்கி, தான் தொலைந்து போகிறது!
-------------------------------------------------------  

மனிதர்கள் இரண்டு வகை, கடன் கேட்கும்போது அம்பியாக, கொடுத்தவன்
அதைத்திருப்பிக் கேட்கையில் அன்னியனாக!
😂😂😂
 

 

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!