Saturday 20 April 2019

உடைதலும்_எழுதலும்


#உடைதலும்_எழுதலும்

காயங்கள்
பட்டு
சிலையான
கல்லொன்று
சொல்லொன்று
தாங்காமல்
உடைந்துப்போனது
****
உடைந்துப்போன
பொம்மையொன்று
அன்னையாக மாறிய
சிறுமியின் கைகளில்
உயிர்த்தெழுந்தது
****
உயிர்த்தெழுந்த
இயேசுவின்
கருணையொன்று
மனிதக்கொலைகளில்
தாமே சென்று
ஆணிகளில்
மரித்துப்போனது
***
மரித்துப்போன
சிறுசெடியின்
இலைகள்
அன்பின் விழித்துளிகளில்
உணர்வு பூக்களை
பிரசவித்தது
***
பிரசவித்து
பேணிக் காத்தப்
பிள்ளையொன்று
துயரமென்று
முதியவளின்
மனதில்
அமிலமூற்றிச் சென்றது
****
சென்ற
உறவுகளின்
கணக்கில்
படித்த பாடமொன்று
மனதின் ஓரத்தில்
நீங்காமல்
நிலைத்து நின்றது
***
நின்றுப்போன
மழையாவும்
கருணையற்று
போவதில்லை
இயற்கையின்
அன்புத் தாலாட்டலில்
மேகமாய்
சூல்கொண்டது!
****
சூல்கொண்ட
வயிற்றிலிருந்து
பிறப்பதெல்லாம்
குழந்தைகளில்லை
மனதின் கருணையில்
மட்டுமே
வைரங்கள்
வெளிப்படுகின்றது!
***

March 10, 2018
Image may contain: one or more people, outdoor and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!